மாணவர்களுக்கு சூடு வைத்த விவகாரம் : பள்ளி ஆசிரியை கைது?
விழுப்புரம், ஜூலை, 10 :
Updated Time : 10-06-2016 17:53 PM Print

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கற்பூரத்தால் பள்ளி மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். மேலும் தலைமை ஆசிரியர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பாலி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேருக்கு ஆசிரியை சூடு வைத்துள்ளார்.
சரியாக படிக்காத மாணவர்களை அதே வகுப்பைச் சேர்ந்த பிற மாணவர்களால் பிடிக்க வைத்து ஆசிரியை வைஜெயந்தி மாலா சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று மாணவர்களுக்கு சூடு வைக்கப்பட்ட நிலையில், இன்று பெற்றோர் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Updated Time : 10-06-2016 17:53 PM Print


